Sunday, January 20, 2008

Evolution Vs Mutation

இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காகவே எழுதப்பட்டது...



நேற்று வழக்கம் போல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். (சமையல் தாங்கோ...) அப்போது குயில் என்னை அலைபேசியில் அழைத்தான். சிறிது நேரம் நலம் விசாரித்து விட்டு அந்த சந்தேகத்தைக் கேட்டான்.
"மாம்ஸ், ம்யூட்டேஷனுக்கும்(Mutation) எவோலுஷனுக்கும் (Evolution) என்னடா வித்யாசம்"

"திடீர்னு ஏன்டா இந்தக் கேள்வி" நான் கேட்டேன்.

"இல்ல மாமா, எங்கேயோ படிச்ச ஞாபகம், உனக்குத் தெரிஞ்சா சொல்லேன்டா"

"சரிடா உனக்கு ஒரு உதாரணத்த வச்சு சொல்லுறேன், புரியுதான்னு பாரு"
"சரி சொல்லு மாம்ஸ்"

“உனக்கு நம்ம குடிகாரன் ஞாபகம் இருக்கு இல்லையா, அவனப் பாரு, ஃபர்ஸ்ட் இயர்ல ரொம்ப அப்பாவியா ஒரு சோடா புட்டி கண்ணாடியப் போட்டுக்கிட்டு சிரிச்சுக்கிட்டு அலைவான். அந்த சமயத்துல அவன் இந்த அளவுக்கு மோசமா வருவான்னு யாரும் துண்டப் போட்டு தாண்டினாலும் நாம நம்பியிருப்போமா? ஆனா இப்போ உண்மையக் கண்ணால பாக்கிறோம், இதுக்குப் பேரு தான் எவோலுஷன். ரொம்ப ரொம்ப மெதுவா நடந்தது இல்லையா அவனோட மாற்றாம், அது மட்டுமில்லாம அவன் என்னைக்கு இப்படி மாறினான்னு யாராலயும் சொல்ல முடியாது
உயிர் நன்பனோட அப்பா இறந்ததுக்குக் கூட அவன் வரலை, ஆனா நெனச்சா வந்திருக்கலாம். இது மாதிரி ரொம்ப மெதுவா ஆனா உறுதியா நிகழ்கிற மாற்றத்துக்குப் பேரு தான் எவோலுஷன். அந்த மாற்றம் நிகழ்றத நம்மால உணர முடியாது. மாறிப் போனத மட்டும் தான் உணர முடியும்."

"சரி ம்யூட்டேஷன் பத்தி சொல்லு மாம்ஸ்"

"சரி, இப்போ இன்னொரு பையன எடுத்துக்கோ, அவன் 2007 டிசம்பர் 24 வரைக்கும் இருந்த நிலை வேற, அதுக்கு அப்புறம் இருந்த நிலை வேற. இதுக்கு முன்னாடி நைட்டு 11:30 மணிக்கு தான் சங்கத்திலேருந்து அவங்க வீட்டுக்குக் கிளம்புவான். ஆனா இப்போ, 10:15 கூட ரொம்ப லேட் ஆகிப் போச்சுனு சொல்றான். அது கூட பரவாயில்ல ஆண்டுக்கு ஒரு தடவை சங்கத்துல எல்லாரும் நம்ம தூத்துக்குடி கடற்கரையில சந்திக்கலாம்னு இருந்தா அந்த நாயி ஒரு மொக்கை காரணத்த சொல்லி வராம இருந்தான், அன்னிக்கு அந்த ஒரு நாறப்பயலத் தவிர எல்லோரும் இருந்தோம். அவனுக்கு 2007ல இப்போ தான் எல்லா நன்பர்களையும் பார்க்க வாய்ப்புன்னு தோனுச்சுன்னா வந்திருப்பான் இல்லையா. இது கூட பரவாயில்லை, நன்பர்கள் எவ்வ்ளோ சொல்லியும் சிக்கன் சாப்பிடாத நாயி, அன்னிக்கு மட்டும் "ஐ லவ் சிக்கன்"-னு டையலாக் விட்டு சாப்பிட்டிருக்கான். வீட்டுக்காக ஒரு வேலை செய்வானா இவன்? இப்போ என்னடான்னா நெல்லிக்காய் வாங்கிக் கொடுக்குறான், பாவாடை நாடா கோர்த்துக் கொடுக்குறான், லைனிங் க்ளாத் வாங்கிக் கொடுக்குறான், ஆனா எதையுமே அவனோட வீட்டுக்குப் பண்ணலை இந்த மாதிரியான மாற்றத்துக்குப் பேரு தான் ம்யூட்டேஷன். ஒரு குறிப்பிட்ட காரணத்தால உடனடியா நடக்கிற மாற்றம் தான் அது. அது எப்போ நடந்ததுன்னு தெளிவாவே தெரியும், காரணமும் எல்லாராலும் உணர முடியும்.

"இப்போ வித்யாசம் புரிஞ்சுதாடா?"

"ரொம்பத் தெளிவாவே புரிஞ்சுது, இது மாதிரி அடிக்கடி சந்தேகம் கேக்கிறேன், நீயும் இது மாதிரியே அடிக்கடி தீர்த்து வையி. நான் நளைக்கு கூப்பிடுறேன்"

தொடர்பு துண்டிக்கப்பட்டது.

4 comments:

Unknown said...

mams intha avamanam avanuku kannathu....... avan ithuku ellam asayura alu kidaiyathu..... ithuku kandipa avan feel panna matan... thodachikithu avan pathuku poikitae iruppan..... avan alanum antha mathiri onnu post pannu..... nan vena tips taran avunga mama kopa paduthunathum illama adutha nalla poi nellika vangi koduthathu, pen drive kaethaduu kodukama ponathu, avan amma akka ella avankita paserathukae payapaduvanga ana avan mamiyar vithuku poi kaikari vangi kodukarathu... vithula thoongithu iruppan namma busyanu kaetha ama nu solrathu, appadiya busya irunthalam avunga patiku xerox yaduthu kodukarathu ippadi neraiya irukku ellathaym add pannu.... adutha blogla avan alanum sariya....

Anonymous said...

dai,
yaarudaa antha mutation aasami???
come on tell me...
mothalla blog padikkum pothu kuyila thaan solriyonnu ninaichen. aana kuyilae comment eluthum podhu, antha aasamy yaaru???

Anonymous said...

dai vengaayam...
yaarudaa antha mutation party?
solli tholadaa koomuttai payale...

KAUSHIK CHELLIAH said...

this is ur third classical blog which i like very much.

why dont you stick to this short length. short posts are more powerfull compared to ur lengthy posts.

the 2 examples that u take to explain the scientific concepts- really great.

once again the thoothukudi slang stands out of the rest.