என் வாழ்வின் மிக நீளமான நாள் -5
பேருந்து சோனகன்விளையைத் தாண்டி வேகமாகச் சென்று கொண்டிருந்தது. என் மனம் பல்வேறு உணர்வுகளால் அலைக்கழிக்கப்பட்டிருந்தது.
இந்தப் பாதையில் நெல்லை செல்வது இதுவே கடைசி நாள்.
இன்னும் நாற்பத்தைந்து நிமிடத்தில் அவளை விட்டு நிரந்தரமாகப் பிரியப் போகிறேன்; என்றுமே பார்க்க முடியாது என்ற எண்ணமும் மனதில் தீராத வலியை ஏற்படுத்தியிருந்தது.
பக்கவாட்டில் பார்க்கும் போது அவளுடைய கம்மல் தெரிந்தது. சற்றெ பெரிய புள்ளியைப் போல காதில் ஒட்டிக்கொண்டு இருந்தது. புதியது என்று நினைக்கிறேன்.
முன்பு வேறொன்று இருந்தது. சற்று நீளமாக "பென்டன்ட்" மாடலில் இருந்தது.
சரியாக ஒரு ஆண்டுக்கு முன் ஏதோ ஒரு நாளில் என் வகுப்பறையில் ஏதோ ஒரு மொக்கை லெக்சரின் போது, வகுப்பை மும்முரமாகக் கவனிக்கும் சாக்கில் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
நானும் எப்பவும் போல் வகுப்பைக் கவனிப்பதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் கடமையே கண்ணாக அவளைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.
கன்னத்தில் கை வைத்துக் கொண்டிருந்த அவளுடைய கையின் ஆள்காட்டி விரல் மட்டும் தொங்கிக் கொண்டிருந்த காதனியை தட்டி தட்டி விளையாடிக் கொண்டிருந்தது.
ஒவ்வொரு முறை தட்டும் போதும் அவளுடைய காதனி ஊசலாடிக் கொண்டிருந்தது, அவளுடைய காதனிக்குத் துனையாக என் உள்ளமும் கூட.......
எதேச்சையாக் பேருந்து நடத்துனரைத் தேடுவது போல அவள் திரும்பிப் பார்க்க, என் நினைவலைகள் பாதியிலேயே அறுந்து போனது.
இருவர் விழிகளும் மீண்டும் ஒரு முறை சந்தித்துக் கொண்டன. என்னைப் பார்த்தால் என்ன நினைப்பாள். இங்கேயும் வந்து விட்டான் என்று நினைப்பாளோ? தெரியவில்லை.
எனக்கு வருத்தமில்லை. ஏனெனில் இதற்கு முன்பு அவளைப் பார்ப்பதற்காக மட்டுமே பலமுறை நெல்லை சென்றிருக்கிறேன்.
ஏன் சென்றேன்?
ஏன் அவளிடம் அந்த அளவுக்கு ஈர்க்கப்பட்டேன்?
அவளுடைய முகத்தை எப்போதும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று தூண்டியது எது?
விடை தெரியவில்லை;
தெரிந்தால் அது காதலும் இல்லை.
சிறிது நேரத்தில் அவளுடைய நிறுத்தம் வந்தது. அவளுடைய முகத்தைப் பார்க்கக் கூடாது!
என்றைக்குமே...
அறிவு கட்டளையிட்டது.
ஆனால் உள்ளமோ, இறங்கிப் போகும் முன் ஒரே ஒரு முறை திரும்பிப் பார் என்று அவளிடம் கெஞ்சியது.
என் அறிவு என் உள்ளத்திடம் தோற்றது,
என் உள்ளம் அவளிடம் தோற்றது.
ஆம் அவள் திரும்பிக் கூடப் பார்க்க வில்லை. அப்படியே இறங்கிச் சென்றாள். (ஏன்டா திரும்பிப் பாக்குற மாதிரியா ஒம்மூஞ்சி இருக்கு? “பாவம்டா அந்தப்புள்ள” என்று நீங்கள் கேட்பதும் புரிகிறது)
இருப்பினும் அவளை அறியாமல் அவள் எனக்கு விட்டுச் சென்ற சில நல்ல விஷயங்களும் இருந்தன.
நிராகரிக்கப் படுவதன் வலி எப்படி இருக்கும் என்று எனக்குக் உணர வைத்திருந்தாள் (கற்றுத்தந்திருந்தாள்).
இனி வாழ்வின் எந்த ஒரு தோல்வியும், எந்த இன்டர்வியூவில் நிராகரிக்கப்பட்டாலும் அது எனக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாது. வாழ்வின் தோல்வியை எதிர்கொள்ளும் பக்குவத்தையும் எனக்குப் பழக்கப்படுத்தியிருந்தாள். மேலும் என்னுடைய ஈ-மெயிலுக்கு Password-ம் தந்துவிட்டுப் போயிருக்கிறாள்.
நன்றி பெண்ணே!
சிறிது நேரத்தில் எங்கள் பேருந்து பாளை பேருந்து நிலையத்தைக் கடந்து மத்திய சிறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இடதுபுறம் திரும்பி சிறைச் சாலையைப் பார்த்தேன்.
நெஞ்சில் ஏதோ பெரிய பாரம் அழுத்துவது போல உணர்ந்தேன். ஒரு பெருமூச்சுடன் அதைக் கடந்து பேருந்து நிலையத்தை அடைந்தது.
சரியாக 40 நிமிடத்தில் எல்லா வேலையும் முடிந்தது, ரெஃபெரென்ஸ் கையொப்பம் வாங்கியாகி விட்டது. நேர்முகத்தேர்வுக்கான சில அறிவுரைகளைப் பெற்றுக்கொண்டு நடந்து வந்து பேருந்து நிலையத்தை அடைந்த போது மணி 19:40.
திருச்செந்தூருக்கான அடுத்த பேருந்து இன்னும் 15 நிமிடத்தில் கிளம்பும். அருகிலிருந்த ஒரு STD பூத்தில் சென்று 91461 23......
ஜான் தான் எடுத்தான். டேய் தங்கச்சி அங்கே வந்தாளா? என்று கேட்டேன்...... STD பில்ரு. 6.50-ஐத் தாண்டுவதற்குள் பேச வேண்டியதைப் பேசி முடித்தேன். இல்லையென்றால் திருச்செந்தூர் செல்ல முடியாது.
பேசி முடித்து வெளியே வந்த போது இதுவரை உடலில் இருந்த துறுதுறுப்பு மறைந்திருந்தது. உடலும் உள்ளமும் துவண்ட நிலையில் பேருந்தில் ஏறி அமர்ந்தேன். நான் சந்தேகப்பட்டது சரி தான். என் தங்கை காலையில் சொன்னது போல அந்த Rs.1000 கொடுத்தது தந்தை இல்லை.
என் தங்கை தான் அவளுடைய காதனியை அடகு வைத்துக் கொடுத்திருக்கிறாள்.
ஒரு விநாடியில் என் காதலியின் கம்மல் என் கண்களிலிருந்து மறைந்து என் தங்கையின் முகம் நினைவுக்கு வந்தது. ஏன் இப்படிச் செய்கிறாள். பணம் வேண்டுமானால் என் நன்பர்கள் பார்த்துக் கொள்வார்கள் தானே.
இவள் ஏன்?
ஏற்கனவே தன்னுடைய செயினை அடகு வைத்துத் தான் இந்த ஆண்டுக்கான கல்லூரிக் கட்டணத்தை செலுத்த வைத்தாள். இப்போது கம்மலும் போய் விட்டது.
பாவம் இவளே இறால் பண்ணை, STD பூத் என்று பல இடங்களில் வேலை செய்து கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறாள். வாங்கிய சம்பளத்தை அப்படியே எனக்குக் கொடுத்து விடுகிறாள்.
என் தங்கையே எனக்கு அம்மாவாக இருந்திருக்கலாம். இனிமேல் அவளைக் கஷ்டப்பட விடக்கூடாது என்று உள்ளத்தில் உறுதி பூண்டேன். பேருந்து மெதுவாக ஊர்ந்து பாளை மத்திய சிறையை நெருங்கிய போது உள்ளம் மேலும் கணத்தது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நான் எடுத்துக் கொண்ட உறுதி என் நினைவுக்கு வந்தது,
"ஒரு நல்ல அண்ணனாக நான் வெற்றி பெற வேண்டுமானால் ஒரு நல்ல ப்ரொஃபெஷனலாக நான் வெற்றி பெற்றே ஆக வேண்டும்; ஒரு நல்ல ப்ரொஃபெஷனலாகவும் ஒரு நல்ல அண்ணனாகவும் நான் வெற்றி பெற வேண்டுமானால் ஒரு காதலனாகத் தோற்பதை நான் மனமார ஏற்றுக் கொள்கிறேன்."
பேருந்து வேகமெடுத்தது. காலை 5:30 மணியிலிருந்து இப்போது வரையில் உடலில் ஓய்வு இல்லாமையாலும், கடைசி ஒரு மணி நேரம் உள்ளத்தில் ஏற்பட்ட அயற்சியும் பேருந்திலேயே என்னைத் தூங்க வைத்தது.
திருச்செந்தூர் வந்து சேர்ந்த போது மணி 21:35. என்னுடைய அறையை நோக்கி நடந்தேன். என்னுடைய அறையை நெருந்க்கிய போது நன்பர்கள் எல்லோரும் வெளியே வந்து கொண்டிருந்தனர்.
பலர் மூட்டை முடிச்சுகளோடு.
திருச்செந்தூரில் எங்களுக்கு கடைசி இரவு. கோயில் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தோம். ஒவ்வொருவராகப் பேருந்தில் ஏற்றி விட்டோம்.
திருச்சி, நாமக்கல், சேலம், பந்தல்குடி என்று ஒவ்வொரு ஊருக்குப் போகிற நன்பர்களையும் ஆரத்தழுவி வழி அனுப்பி வைத்தோம்.
"மறக்காம ஃபோன் பண்ணுடா",
“ ஈ-மெயில் அனுப்புடா",
"எப்பவும் போல என்னோட ஃபோன் நம்பரையும் தொலைச்சுறாதடா",
"அப்பா அம்மாவக் கேட்டதாச் சொல்லுடா",
"மாப்ள, அவ ஒங்க ஊரு தானே, அவ சென்னை கிளம்பினா, எனக்கு ஃபோன் பண்ணுடா",
"அடுத்த மாசம் பெங்களூர் போகும் போது என் கிட்ட ஃபோன் பண்ணிச் சொல்லிட்டுப் போடா" என்பன போன்ற அக்கறையான குரல்கள் ஒலித்தன.
அவ்வப்போது கண்டக்டருக்குக் கேட்கும் குரலில் , "நன்பா, மத்த பஸ் மாதிரி இதுலேயும் டிக்கட் எடுக்காமப் போகனும்னு நெனைக்காதடா, இந்தக் கண்டக்டரு கொஞ்சம் வெவரமான ஆளு." என்றும் கண்டக்டரிடம் நேராகவே சென்று, " சார், பையன் டிக்கட் எப்பவும் எடுக்க மாட்டான், மறக்காம நீங்களே கேட்டு வாங்கிடுங்க" என்று எங்க பயலையும் கண்டக்டரையும் சேர்த்துக் கலாய்ப்பதுமாய் ஒரு வழியாய் வழி அனுப்பு வைபவம் முடிந்த போது மணி 00:35 ஆகியிருந்தது.
நான், சந்துரு, ப்ரேமானந்த், ராமலிங்கம் நால்வரும் சிறிது நேரம் கடற்கரையில் அமர்ந்து பேசி விட்டு அறைக்குத் திரும்பிய போது மணி 01:55 ஆகியிருந்தது. சிறிது நேரத்தில் எல்லாரும் உறங்க ஆரம்பித்தனர்.
ஜான் ஃபோனில் சொன்ன செய்தியை சந்துருவிடம் சொன்னேன், என்னுடைய உறுதிமொழியையும் அவனிடம் சொன்னேன்.
"ஏற்கனவே ஒரு காதலனாய்த் தோற்று விட்டேன்டா" என்றேன்.
"நிச்சயம் ஒரு அண்ணாகவும் ஒரு ப்ரொஃபஷனலாகவும் வெற்றி பெறுவாய்" என்றான் என் நன்பன். தூக்கம் மெதுவாகக் கண்களைத் தழுவியது.
முற்றும்...
பின்னுரை:2009-ல் ஏதோ ஒரு நாள்.
முத்துவேல் தன்னுடைய 2004-ம் ஆண்டு டைரியை ஒரு பெருமூச்சுடன் மூடி வைத்தான். அவனது கண்கள் கலங்கியிருந்தது. மேசையின் மீதிருந்த அந்தப் புகைப்படத்தை எடுத்துத் துடைத்து சூட்கேசுக்குள் வைத்தான்.
2004-ம் ஆண்டின் இறுதியில் ஒரு சாலை விபத்தில் சிக்கி இறந்து போன அவனுடைய அருமைத்தங்கையின் புகைப்படம் தான் அது.
கையில் இருந்த ஃப்ளைட் டிக்கட்டை நோக்கினான். நாளை மாலைக்குள் உ.பி-யிலுள்ள நரோரா அனுமின் நிலையத்திற்குச் சென்று அந்த டர்பைன் கட்டுப்பாட்டு சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும் என்பது அவனுக்கு இடப்பட்ட கட்டளை. முத்துவேல் தன்னுடைய சூட்கேசை எடுத்துக் கொண்டு வலியைச் சுமந்த நெஞ்சோடு கிளம்பினான்.
பேருந்து சோனகன்விளையைத் தாண்டி வேகமாகச் சென்று கொண்டிருந்தது. என் மனம் பல்வேறு உணர்வுகளால் அலைக்கழிக்கப்பட்டிருந்தது.
இந்தப் பாதையில் நெல்லை செல்வது இதுவே கடைசி நாள்.
இன்னும் நாற்பத்தைந்து நிமிடத்தில் அவளை விட்டு நிரந்தரமாகப் பிரியப் போகிறேன்; என்றுமே பார்க்க முடியாது என்ற எண்ணமும் மனதில் தீராத வலியை ஏற்படுத்தியிருந்தது.
பக்கவாட்டில் பார்க்கும் போது அவளுடைய கம்மல் தெரிந்தது. சற்றெ பெரிய புள்ளியைப் போல காதில் ஒட்டிக்கொண்டு இருந்தது. புதியது என்று நினைக்கிறேன்.
முன்பு வேறொன்று இருந்தது. சற்று நீளமாக "பென்டன்ட்" மாடலில் இருந்தது.
சரியாக ஒரு ஆண்டுக்கு முன் ஏதோ ஒரு நாளில் என் வகுப்பறையில் ஏதோ ஒரு மொக்கை லெக்சரின் போது, வகுப்பை மும்முரமாகக் கவனிக்கும் சாக்கில் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
நானும் எப்பவும் போல் வகுப்பைக் கவனிப்பதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் கடமையே கண்ணாக அவளைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.
கன்னத்தில் கை வைத்துக் கொண்டிருந்த அவளுடைய கையின் ஆள்காட்டி விரல் மட்டும் தொங்கிக் கொண்டிருந்த காதனியை தட்டி தட்டி விளையாடிக் கொண்டிருந்தது.
ஒவ்வொரு முறை தட்டும் போதும் அவளுடைய காதனி ஊசலாடிக் கொண்டிருந்தது, அவளுடைய காதனிக்குத் துனையாக என் உள்ளமும் கூட.......
எதேச்சையாக் பேருந்து நடத்துனரைத் தேடுவது போல அவள் திரும்பிப் பார்க்க, என் நினைவலைகள் பாதியிலேயே அறுந்து போனது.
இருவர் விழிகளும் மீண்டும் ஒரு முறை சந்தித்துக் கொண்டன. என்னைப் பார்த்தால் என்ன நினைப்பாள். இங்கேயும் வந்து விட்டான் என்று நினைப்பாளோ? தெரியவில்லை.
எனக்கு வருத்தமில்லை. ஏனெனில் இதற்கு முன்பு அவளைப் பார்ப்பதற்காக மட்டுமே பலமுறை நெல்லை சென்றிருக்கிறேன்.
ஏன் சென்றேன்?
ஏன் அவளிடம் அந்த அளவுக்கு ஈர்க்கப்பட்டேன்?
அவளுடைய முகத்தை எப்போதும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று தூண்டியது எது?
விடை தெரியவில்லை;
தெரிந்தால் அது காதலும் இல்லை.
சிறிது நேரத்தில் அவளுடைய நிறுத்தம் வந்தது. அவளுடைய முகத்தைப் பார்க்கக் கூடாது!
என்றைக்குமே...
அறிவு கட்டளையிட்டது.
ஆனால் உள்ளமோ, இறங்கிப் போகும் முன் ஒரே ஒரு முறை திரும்பிப் பார் என்று அவளிடம் கெஞ்சியது.
என் அறிவு என் உள்ளத்திடம் தோற்றது,
என் உள்ளம் அவளிடம் தோற்றது.
ஆம் அவள் திரும்பிக் கூடப் பார்க்க வில்லை. அப்படியே இறங்கிச் சென்றாள். (ஏன்டா திரும்பிப் பாக்குற மாதிரியா ஒம்மூஞ்சி இருக்கு? “பாவம்டா அந்தப்புள்ள” என்று நீங்கள் கேட்பதும் புரிகிறது)
இருப்பினும் அவளை அறியாமல் அவள் எனக்கு விட்டுச் சென்ற சில நல்ல விஷயங்களும் இருந்தன.
நிராகரிக்கப் படுவதன் வலி எப்படி இருக்கும் என்று எனக்குக் உணர வைத்திருந்தாள் (கற்றுத்தந்திருந்தாள்).
இனி வாழ்வின் எந்த ஒரு தோல்வியும், எந்த இன்டர்வியூவில் நிராகரிக்கப்பட்டாலும் அது எனக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாது. வாழ்வின் தோல்வியை எதிர்கொள்ளும் பக்குவத்தையும் எனக்குப் பழக்கப்படுத்தியிருந்தாள். மேலும் என்னுடைய ஈ-மெயிலுக்கு Password-ம் தந்துவிட்டுப் போயிருக்கிறாள்.
நன்றி பெண்ணே!
சிறிது நேரத்தில் எங்கள் பேருந்து பாளை பேருந்து நிலையத்தைக் கடந்து மத்திய சிறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இடதுபுறம் திரும்பி சிறைச் சாலையைப் பார்த்தேன்.
நெஞ்சில் ஏதோ பெரிய பாரம் அழுத்துவது போல உணர்ந்தேன். ஒரு பெருமூச்சுடன் அதைக் கடந்து பேருந்து நிலையத்தை அடைந்தது.
சரியாக 40 நிமிடத்தில் எல்லா வேலையும் முடிந்தது, ரெஃபெரென்ஸ் கையொப்பம் வாங்கியாகி விட்டது. நேர்முகத்தேர்வுக்கான சில அறிவுரைகளைப் பெற்றுக்கொண்டு நடந்து வந்து பேருந்து நிலையத்தை அடைந்த போது மணி 19:40.
திருச்செந்தூருக்கான அடுத்த பேருந்து இன்னும் 15 நிமிடத்தில் கிளம்பும். அருகிலிருந்த ஒரு STD பூத்தில் சென்று 91461 23......
ஜான் தான் எடுத்தான். டேய் தங்கச்சி அங்கே வந்தாளா? என்று கேட்டேன்...... STD பில்ரு. 6.50-ஐத் தாண்டுவதற்குள் பேச வேண்டியதைப் பேசி முடித்தேன். இல்லையென்றால் திருச்செந்தூர் செல்ல முடியாது.
பேசி முடித்து வெளியே வந்த போது இதுவரை உடலில் இருந்த துறுதுறுப்பு மறைந்திருந்தது. உடலும் உள்ளமும் துவண்ட நிலையில் பேருந்தில் ஏறி அமர்ந்தேன். நான் சந்தேகப்பட்டது சரி தான். என் தங்கை காலையில் சொன்னது போல அந்த Rs.1000 கொடுத்தது தந்தை இல்லை.
என் தங்கை தான் அவளுடைய காதனியை அடகு வைத்துக் கொடுத்திருக்கிறாள்.
ஒரு விநாடியில் என் காதலியின் கம்மல் என் கண்களிலிருந்து மறைந்து என் தங்கையின் முகம் நினைவுக்கு வந்தது. ஏன் இப்படிச் செய்கிறாள். பணம் வேண்டுமானால் என் நன்பர்கள் பார்த்துக் கொள்வார்கள் தானே.
இவள் ஏன்?
ஏற்கனவே தன்னுடைய செயினை அடகு வைத்துத் தான் இந்த ஆண்டுக்கான கல்லூரிக் கட்டணத்தை செலுத்த வைத்தாள். இப்போது கம்மலும் போய் விட்டது.
பாவம் இவளே இறால் பண்ணை, STD பூத் என்று பல இடங்களில் வேலை செய்து கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறாள். வாங்கிய சம்பளத்தை அப்படியே எனக்குக் கொடுத்து விடுகிறாள்.
என் தங்கையே எனக்கு அம்மாவாக இருந்திருக்கலாம். இனிமேல் அவளைக் கஷ்டப்பட விடக்கூடாது என்று உள்ளத்தில் உறுதி பூண்டேன். பேருந்து மெதுவாக ஊர்ந்து பாளை மத்திய சிறையை நெருங்கிய போது உள்ளம் மேலும் கணத்தது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நான் எடுத்துக் கொண்ட உறுதி என் நினைவுக்கு வந்தது,
"ஒரு நல்ல அண்ணனாக நான் வெற்றி பெற வேண்டுமானால் ஒரு நல்ல ப்ரொஃபெஷனலாக நான் வெற்றி பெற்றே ஆக வேண்டும்; ஒரு நல்ல ப்ரொஃபெஷனலாகவும் ஒரு நல்ல அண்ணனாகவும் நான் வெற்றி பெற வேண்டுமானால் ஒரு காதலனாகத் தோற்பதை நான் மனமார ஏற்றுக் கொள்கிறேன்."
பேருந்து வேகமெடுத்தது. காலை 5:30 மணியிலிருந்து இப்போது வரையில் உடலில் ஓய்வு இல்லாமையாலும், கடைசி ஒரு மணி நேரம் உள்ளத்தில் ஏற்பட்ட அயற்சியும் பேருந்திலேயே என்னைத் தூங்க வைத்தது.
திருச்செந்தூர் வந்து சேர்ந்த போது மணி 21:35. என்னுடைய அறையை நோக்கி நடந்தேன். என்னுடைய அறையை நெருந்க்கிய போது நன்பர்கள் எல்லோரும் வெளியே வந்து கொண்டிருந்தனர்.
பலர் மூட்டை முடிச்சுகளோடு.
திருச்செந்தூரில் எங்களுக்கு கடைசி இரவு. கோயில் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தோம். ஒவ்வொருவராகப் பேருந்தில் ஏற்றி விட்டோம்.
திருச்சி, நாமக்கல், சேலம், பந்தல்குடி என்று ஒவ்வொரு ஊருக்குப் போகிற நன்பர்களையும் ஆரத்தழுவி வழி அனுப்பி வைத்தோம்.
"மறக்காம ஃபோன் பண்ணுடா",
“ ஈ-மெயில் அனுப்புடா",
"எப்பவும் போல என்னோட ஃபோன் நம்பரையும் தொலைச்சுறாதடா",
"அப்பா அம்மாவக் கேட்டதாச் சொல்லுடா",
"மாப்ள, அவ ஒங்க ஊரு தானே, அவ சென்னை கிளம்பினா, எனக்கு ஃபோன் பண்ணுடா",
"அடுத்த மாசம் பெங்களூர் போகும் போது என் கிட்ட ஃபோன் பண்ணிச் சொல்லிட்டுப் போடா" என்பன போன்ற அக்கறையான குரல்கள் ஒலித்தன.
அவ்வப்போது கண்டக்டருக்குக் கேட்கும் குரலில் , "நன்பா, மத்த பஸ் மாதிரி இதுலேயும் டிக்கட் எடுக்காமப் போகனும்னு நெனைக்காதடா, இந்தக் கண்டக்டரு கொஞ்சம் வெவரமான ஆளு." என்றும் கண்டக்டரிடம் நேராகவே சென்று, " சார், பையன் டிக்கட் எப்பவும் எடுக்க மாட்டான், மறக்காம நீங்களே கேட்டு வாங்கிடுங்க" என்று எங்க பயலையும் கண்டக்டரையும் சேர்த்துக் கலாய்ப்பதுமாய் ஒரு வழியாய் வழி அனுப்பு வைபவம் முடிந்த போது மணி 00:35 ஆகியிருந்தது.
நான், சந்துரு, ப்ரேமானந்த், ராமலிங்கம் நால்வரும் சிறிது நேரம் கடற்கரையில் அமர்ந்து பேசி விட்டு அறைக்குத் திரும்பிய போது மணி 01:55 ஆகியிருந்தது. சிறிது நேரத்தில் எல்லாரும் உறங்க ஆரம்பித்தனர்.
ஜான் ஃபோனில் சொன்ன செய்தியை சந்துருவிடம் சொன்னேன், என்னுடைய உறுதிமொழியையும் அவனிடம் சொன்னேன்.
"ஏற்கனவே ஒரு காதலனாய்த் தோற்று விட்டேன்டா" என்றேன்.
"நிச்சயம் ஒரு அண்ணாகவும் ஒரு ப்ரொஃபஷனலாகவும் வெற்றி பெறுவாய்" என்றான் என் நன்பன். தூக்கம் மெதுவாகக் கண்களைத் தழுவியது.
முற்றும்...
பின்னுரை:2009-ல் ஏதோ ஒரு நாள்.
முத்துவேல் தன்னுடைய 2004-ம் ஆண்டு டைரியை ஒரு பெருமூச்சுடன் மூடி வைத்தான். அவனது கண்கள் கலங்கியிருந்தது. மேசையின் மீதிருந்த அந்தப் புகைப்படத்தை எடுத்துத் துடைத்து சூட்கேசுக்குள் வைத்தான்.
2004-ம் ஆண்டின் இறுதியில் ஒரு சாலை விபத்தில் சிக்கி இறந்து போன அவனுடைய அருமைத்தங்கையின் புகைப்படம் தான் அது.
கையில் இருந்த ஃப்ளைட் டிக்கட்டை நோக்கினான். நாளை மாலைக்குள் உ.பி-யிலுள்ள நரோரா அனுமின் நிலையத்திற்குச் சென்று அந்த டர்பைன் கட்டுப்பாட்டு சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும் என்பது அவனுக்கு இடப்பட்ட கட்டளை. முத்துவேல் தன்னுடைய சூட்கேசை எடுத்துக் கொண்டு வலியைச் சுமந்த நெஞ்சோடு கிளம்பினான்.