இது எங்கள் கல்லூரி இறுதி ஆண்டில் நடந்த நிகழ்வு. எதிர்பாராமல் நடந்த சில துயரமான நிகழ்வுகளால் எங்கள் கல்லூரிக்கும் அருகில் உள்ள கலைக் கல்லூரி மாணவர்களுக்கும் கிட்டத்தட்ட கலவரம் ரேஞ்சுக்கு பிரச்சினை முற்றி விட்டது.
எங்கள் கல்லூரியிலிருந்து மேற்குத் திசையிலும் வடக்குத் திசையிலும் இரண்டு பெரிய நகரங்கள். இரண்டு ஊருக்கும் பேருந்து கல்லூரியால் இயக்கப்படுகிறது.
இப்போது நடந்த பிரச்சினையால் வடக்குப் பகுதிக்கு போகும் பேருந்து நிறுத்தப்பட்டது. எல்லா மாணவர்களும் மேற்கே 40 கிமீ போய் பின்பு அங்கிருந்து 40 கிமீ செல்ல வேண்டிய நிலை. கருவாப்பயல் உள்ளூரிலேயே ரூம் எடுத்துத் தங்கியதால் இந்தப் பயணம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் நடந்ததை அறிய பேருந்துக்குள் நாமும் செல்வோம்.
பேருந்து கிளம்பத் தயாராக இருந்தது. உள்ளே எல்லா ஊர் மாணவர்களும் இருந்தனர். கல்லூரியில் பரவியிருந்த வதந்தியின்படி, ஆர்ட்ஸ் கல்லூரி மாணவர்கள் எங்கள் கல்லூரி வாசலில் இருப்பதாகவும், வெளியே யார் வந்தாலும்
அடி உதை தான் என்றும் சற்று பயந்திருந்தனர்.
பேருந்துக்குள்ளே ஒரு பயம் கலந்த மௌனம் நிலவியது. பேருந்து மெதுவாக நகர ஆரம்பித்தது. உடனடியாக பேருந்துகளின் எல்லா கண்ணாடிகளும் மூடப்பட்டன.
பேருந்து கேட்டை கடக்கும் போது நண்பர் வண்டியார் தலையை குனிந்து ஷூ லேஸ்களைக் கட்ட ஆரம்பித்தார். மற்ற எல்லா மாணவர்களும் யாராவது தாக்குவார்களோ என்ற பயத்துடன் கேட்டையே பார்த்துக் கொண்டிருந்தனர். நல்ல வேளை எந்தப் பிரச்சினையும் இல்லை.
பேருந்து மெயின் ரோட்டைத் தொட்டதும் எல்லோருக்கும் தற்காலிக நிம்மதி. இந்தப் பதிவின் நாயகன் லொடுக்கு சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட்டான். ஆனால் ஷூ லேஸ் கட்டி விட்டு நிமிர்ந்த நண்பர் வண்டி முகத்தில் துளி கூட பயம் இல்லை.
இன்பராஜ் லொடுக்குவிடம் கேட்டான், "மச்சான் வண்டி - க்கு தைரியம் அதிகம்டா நாமெல்லாம் பயந்து போயிட்டோம். அவன் முகத்தை பாரு துளி கூட பயம் இல்லை. கேஷுவலா ஷூ லேஸ் கட்டிட்டு கூலா இருக்கான்டா".
லொடுக்கு புன்னகையுடன் சொன்னான், "ஆமாடா ஆனா அவன் போட்டிருக்கிற ஷூ கட் ஷூ டா."
இன்பராஜுக்கு வண்டியின் வீரம் பற்றி தெரிந்து விட்டது.
(நாயி எப்படிடா விட்டா நாலு பேர சீவுற மாதிரி முகத்தை வெச்சிக்கிட்டு இருக்கீங்க)
இப்போ நம்ம ஹீரோ லொடுக்கு பற்றி ஒரு தகவல். பையன் ஒரு காஸனோவா டைப். நீங்க மாசத்துக்கு ஒரு முறை முடி வெட்டுவது மாதிரி இவன் மாசத்துக்கு ஒரு பொண்ணை லவ் பண்ணிக் கொண்டிருப்பான்.
அதுவும் ஒவ்வொருத்தியையும் சின்சியராவே காதலிப்பான். (எப்படிடா உன்னால மட்டும் முடியுது?)
அன்றைய தேதிக்கு அவன் காதலித்த பெண்ணும் அந்தப் பேருந்தில் தான் இருந்தாள். (அது எப்படிங்கடி, கரெக்டா அவனுக்குப் பக்கத்து சீட்டில் வந்து உக்கார்றீங்க? வேற சீட்டே இல்லையா) பேருந்து கிட்டத்தட்ட அபாய எல்லையை தாண்டி விட்டது. எல்லார் முகத்திலும் ஒரு வித நிம்மதி.
அப்போ தான் இன்பா அதை உணர்ந்தான். ஆம். யாரோ ரெண்டு பேர் கண்களால் பேசிக் கொண்டிருந்தனர். அந்த பேச்சின் பொருள் புரிந்து விட்டது.
லொடுக்குவும் அவனுடைய அப்போதைய லவ்வரும் மௌன மொழியில் பேசிக் கொண்டிருந்தார்கள்.
இருவரும் கண்களை சிமிட்டுவதும், தலையை கோணலாக வைத்துக் கொண்டு சிரிப்பதும், கன்னத்தைக் கிள்ளுவது போல சைகை செய்வதும் பேருந்தின் சூழ்நிலையைப் பற்றி சிறிது கூட கவலைப் படாமல் கண்களால் கடலை வறுத்தனர்.
கடைசியாக அவர்கள் பேசியதை இன்பா இன்டர்செப்ட் செய்தான்.
அவள்: நீ எங்க ஊரிலேயே இரங்கி விடேன்டா.
அவன்: இங்கே தங்க இடம் இல்லையே.
அவள்: ஒன்னோட ஃப்ரென்ட் இன்பா வீட்டுக்கு போகலாமே? (அடிப் பாவி அதுக்கு என்னோட வீடு தான் கெடச்சுதா?)
அவன்: இல்ல, அம்மா தேடுவாங்க
(டேய் உண்மைய சொல்லு. ஒங்க தெருவுல கம்ப்யூட்டர் க்ளாஸ் போற ஃபிகரப் பிக்-அப் பண்ணப் போறதுக்கு ஏன்டா நாயே அம்மாவ இழுக்கிற)
அவள்: கடைசி பஸ் பத்து மணிக்கு, அதுல போயேன்டா. கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கலாம்டா. (அடி நாயி, ஏழு மணியிலேருந்து பத்து மணி வரை அப்படி என்னத்தடி பேசப் போறீங்க)
அவன்: இல்லடா அம்மா தேடுவாங்கடா.
(இதுக்கு மேல பொறுக்க முடியாதுடா, இதையெல்லாம் காதுல கேக்கனுமா? இந்தப் பஸ்ஸுக்கு ஒரு ஆக்சிடென்ட் ஆகக் கூடாதா?)
இன்பா டென்ஷன் ஆகி விட்டான்.
லொடுக்குவிடம்," டேய் எல்லாவனும் பயந்து போயி உயிரக் கையில புடிச்சுக்கிட்டிருக்கான், ஒனக்கும் அவளுக்கும் லவ்வு கேக்குதோ? இந்த ரணகளத்திலேயும் ஒங்களுக்கு கிலுகிலுப்பு கேக்குதோ? நாளைக்கு ஒனக்கு ஆப்பு இருக்குடா, ஒன்னோட அடையாளம் அவங்களுக்கு தெரியும்டா நாளைக்கு ஒன்ன தொங்கவிடப் போறாங்கடா"
லொடுக்கு பயத்துடன் கேட்டான், "என்ன அடையாளம்டா"
இன்பா, "ஒன்னோட கழுத்துல இருந்த ஜெபமாலைய ஒருத்தன் சொன்னான்டா. ஒன்ன எவன்டா சட்டையில மூனு பட்டன தொறந்து போட்டு போகச்சொன்னது"
பேசிக் கொண்டே போன இன்பா சட்டென்று பேச்சை நிறுத்தினான்.
பின்பு ஆச்சரியமாய் கேட்டான், "உன்னோட ஜெபமாலைய எங்கே டா?"
லொடுக்கு சட்டைப் பையில் இருந்து அதை வெளியே எடுத்தான்.
"இதையா கேட்டீங்க பாஸ்?"
இன்பா அதிர்ச்சியுடன் கேட்டான், "எப்போடா உள்ள வச்ச?"
லொடுக்கு அப்பாவி முகத்துடன், "இப்போ நீ சொன்னவுடனே தான் டா மச்சான்"
இன்பா கேட்டான், "டேய் இது உனக்கு கேவலமா இல்ல"
லொடுக்கு கோபத்துடன், "டேய் நான் யாருன்னு நாளைக்குத் தெரியும்டா" என்று சொல்லிக் கொண்டே வெளியெ வெறித்துப் பார்த்தான்.
எல்லோரும் எதிர்பார்த்த அந்த மறுனாள் வந்தது. ஆனால் லொடுக்கு கல்லூரிக்கே வரவில்லை.
அதற்கு மறு நாள் எங்கள் வகுப்பு மிகவும் பரபரப்பாக இருந்தது.
கருத்து கந்தசாமி மூச்சிரைக்க வந்தான். (எவன் சிக்கப் போறானோ?)
கருத்து, "டேய் மாமா, லொடுக்கு எங்கே டா? அவன வெளியே போக வேன்டாம்ன்னு சொல்லு டா. அவன அடிக்க ஆர்ட்ஸ் பசங்க ப்ளான் போட்டுருக்காங்கடா".
அப்போது வண்டி வாயைத் திறந்தான், "மச்சான், லொடுக்க யாரும் ஒன்னும் பண்ண முடியாதுடா"
நான், "எப்படி டா?"
வண்டி: "மச்சான், யாருகிட்டயும் சொல்லாதே, அவன் கிட்ட ஒரு வெயிட்டான பொருள் இருக்குடா. எத்தனை பேர்ன்னாலும் எதிர்த்து நிற்கலாமாம்டா".
(யார் கிட்டேயும் சொல்லாதேன்னு சொல்லி சொல்லி இவன் எத்தனை பேரு கிட்ட சொன்னானோ)
நான் கேட்டேன், "என்னடா பொருளு கத்தியா? வாளா? இல்ல அரிவாளா?"
வண்டி:தெரியலடா ஆனா எத்தன பேரு வந்தாலும் பார்க்கலாம்ன்னு அவன் சொன்னான்டா"
இது என்னடா கொடுமை.நேத்திக்கு முன்தினம் வரைக்கும் ரொம்ப மென்மையான பையனா இருந்தவன் இன்னிக்கு ஒரு பெரிய ஆயுதம் வச்சிருக்கான்னா அப்படி என்ன வெப்பன், யாரு குடுத்தா?
எத்தனை பேரு வந்தாலும் எதிர்த்து நிக்கற அளவுக்கு என்ன ஆயுதம் அது?
அடுத்த ஒரு மணி நேரத்தில் பதில் கிடைத்தது.
அடுத்த பதிவில் அந்த பேரழிவு ஆயுதம் பற்றி சொல்கிறேன்.
1 comment:
Well written article.
Post a Comment